கட்டிய தாலியின் ஈரம் கூட காயலையே.. என்ன விட்டு போயிட்டியே மாமா.. நெஞ்சில் அடித்து கதறிய இளம்பெண்..!

By vinoth kumarFirst Published Sep 13, 2022, 2:33 PM IST
Highlights

திருமணமான ஐந்தே நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமான ஐந்தே நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள கோயில் சன்னாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கும் பந்தநல்லூர் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணம் நடைபெற்ற நாள் முதலே பிரசாத் சோகத்துடன் இருந்துள்ளார். 

கடந்த இரண்டு தினங்களாக மனைவியுடன் சரியாக பேசாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனை பிரசாத் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், கறிவிருந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென உட்புறமாக கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் மகன் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த  பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது  தூக்கில் தொங்கி நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே பிரசாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவிடைமருதூர் போலீசார் பிரசாத் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனைவி நெஞ்சில் அடித்து கொண்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

click me!