சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதி கோர விபத்து; உயிரிழந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த உறவினர்கள்

By Velmurugan sFirst Published Oct 30, 2023, 10:54 AM IST
Highlights

சிவகங்கை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, தெற்கு வாடி கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராஜம்மாள் மற்றும் உறவினர் அழகம்மாள் ஆகிய மூன்று பேரும் தங்களது கிராமத்தில் இருந்து சிவகங்கை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது உருளி விலக்கு பகுதியில் மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயற்சித்த போது, ஆறுமுகம் என்பவர் ஓட்டிவந்த இனோவா கார் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

ஆளுநர் ரவி பாஜகவினராகவும், ஆளுநர் மாளிகை பாஜக கட்சி அலுவலகமாகவும் மாறிவிட்டது... வெட்கக்ககேடு- சீறும் ஸ்டாலின்

படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த அவரது மனைவி ராஜம்மாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவரது உறவினர் அழகம்மாள் படுகாயம் அடைந்து 108 வாகனத்தின் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் இந்த விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் உயிரிழந்த ரவியின் உடலுக்கு முதலுதவி செய்ய முயற்சித்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது.

click me!