ராமேஸ்வரம் கோயிலில் அள்ள அள்ள பணம்.. எவ்வளவு தெரியுமா?

Published : Aug 05, 2022, 02:15 PM ISTUpdated : Aug 05, 2022, 02:18 PM IST
ராமேஸ்வரம் கோயிலில் அள்ள அள்ள பணம்.. எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசாமி கோவில். இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசாமி கோவில். இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

குறிப்பாக ஆடி அமாவாசை அன்று, பெற்றோர் இல்லாதவர்கள் ராமநாதசாமி கோவிலுக்கு வந்திருந்து தர்ப்பணம் செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராமநாதசாமி கோவிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, கோவில் நடை பக்தர்களுக்கு திறக்கப்பட்டு, பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிவாலயங்களில் புண்ணியதலமாக கருதப்படும் இந்தக் கோயிலில், நடப்பு ஆடி மாதத்தில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்களின் காணிக்கை செலுத்துதலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ராமநாதசாமி கோவிலில் உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டது. துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 

இதில் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் வருமானமாக ரூபாய் 1 கோடியே 31 ஆயிரத்து 878 ரொக்கம்,  88.500 கிராம் தங்கம், 2 கிலோ 310 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!