அட கடவுளே... ஏர்வாடி மனநல காப்பகத்தில் 11 மனநோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு..!

Published : May 19, 2021, 04:49 PM ISTUpdated : May 20, 2021, 05:04 PM IST
அட கடவுளே... ஏர்வாடி மனநல காப்பகத்தில் 11 மனநோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு..!

சுருக்கம்

ஏர்வாடியில் உள்ள அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள 11 நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏர்வாடியில் உள்ள அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள 11 நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அரசு மனநல காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 49 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில்,  இரண்டு பேருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல்,  காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களுக்கு தொற்று உறுதியானது. 

பின்னர், மனநல காப்பகத்தில் இருந்த மற்ற நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று அவர்களில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்தம் 11 மனநல நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மனநல காப்பகப் பணியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!