பகீர் தகவல்.. மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்.. திட்டவட்டமாக மறுக்கும் பள்ளி நிர்வாகம்.!

By vinoth kumarFirst Published Jun 3, 2021, 6:47 PM IST
Highlights

தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனை அந்த பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனை அந்த பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை கொடுத்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கைது செய்யப்பட்டு ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குமாரபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் புகார் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குமாரபாளையம் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இதனை பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எங்கள் பள்ளியில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக எந்தவிதமான சம்மனும் எங்களுக்கு வரவில்லை. பள்ளியின் நற்பெயருக்கு களங்கும் கற்பிக்கும் வகையில் யாரோ வி‌ஷமிகள் இதுபோன்று ஆதாரமில்லாத தகவலை பரப்பி வருவதாக கூறியுள்ளனர். 

click me!