ஜிம் உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு.. 27 வயது இளைஞர் துடிதுடித்து பலி.. மதுரையில் சோகம்..!

By vinoth kumarFirst Published Jun 7, 2022, 8:41 AM IST
Highlights

வழக்கம் போல உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந் ஸ்ரீவிஷ்ணுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் உடனே ஸ்ரீவிஷ்ணுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மதுரையில் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஸ்ரீவிஷ்ணு திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் கமலேஸ்வரன். இவரது மகன் ஸ்ரீவிஷ்ணு(27). இவர் ஐ.டி., நிறுவனதத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் மாடக்குளம் பகுதியில் 'பிட்னஸ்' சென்டரில் கடந்த 3 ஆண்டுகளாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். 

இந்நிலையில், வழக்கம் போல உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந் ஸ்ரீவிஷ்ணுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் உடனே ஸ்ரீவிஷ்ணுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்ரீவிஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!