நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்.. ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

Published : Apr 22, 2021, 01:56 PM IST
நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்.. ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

சுருக்கம்

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு கிருஷ்ணகிரியில் உள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த, ஆயுதப்படை காவலர் அன்பரசன் என்பவர் நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வழக்கம்போல நீதிமன்ற வளாகத்துக்கு பணிக்காக வந்தார். 

இந்நிலையில், அன்பரசன் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பணிசுமை காரணமாக என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?
கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்