திருமணான 3 மாதத்தில் அதிர்ச்சி... உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை..!

By vinoth kumarFirst Published Nov 25, 2020, 6:48 PM IST
Highlights

திருமணமான 3 மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தை அடுத்த பாகநத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (21). டெய்லரான இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தனி அறையில் சென்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் சரவணன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!