பாத்ரூமுக்குள் கேமராவை விட்டு... இளம்பெண் நிர்வாணமாக குளிப்பதை தினமும் ஜொல்லுவிட்டு ரசித்த இளைஞர்..!

By vinoth kumarFirst Published Feb 29, 2020, 4:21 PM IST
Highlights

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ என்ற ஜீவா (22). இளங்கோ வீடு அருகே ஒரு இளம்பெண், கணவருடன் வசித்து வந்தார். தினமும் அவர் வீட்டிற்கு பின்புறம் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அவர் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க மதில் சுவர் அருகே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நாகர்கோவில் அருகே இளம்பெண் நிர்வாணமாக குளிப்பதை ரகசிய கேமிரா மூலம் படம் எடுத்து ரசித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ என்ற ஜீவா (22). இளங்கோ வீடு அருகே ஒரு இளம்பெண், கணவருடன் வசித்து வந்தார். தினமும் அவர் வீட்டிற்கு பின்புறம் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அவர் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க மதில் சுவர் அருகே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த பெண், மதில் சுவர் அருகே சென்று அந்த பொருளை பார்த்தார். அது ஒரு ரகசிய கேமிரா என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கேமிரா மூலம் யார் படம் எடுக்கிறார்கள் என்று பார்த்தார். 

அப்போது பக்கத்து வீட்டு இளங்கோ தனது செல்போனில் ரகசிய கேமிரா பொருத்தி இளம்பெண் குளித்ததை படம் எடுத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி இளங்கோவிடம் கேட்டார். அதற்கு அவர், இளம்பெண்ணை தகாத வார்த்தைகள் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார்.

இதையடுத்து அந்த பெண் பூதப்பாண்டி போலீசில் சம்பவம் குறித்து புகார் செய்தார். அதில் இளங்கோ தான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்து மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தலைமறைவாக உள்ள இளங்கோவை தேடி வருகின்றனர்.

click me!