போதையேறியாச்சு... புத்தி மாறிப்போச்சு... பஸ் ஸ்டாண்டில் ஓவராக எல்லை மீறிய இளம்ஜோடி..!

By vinoth kumarFirst Published Sep 13, 2019, 6:06 PM IST
Highlights

ஈரோட்டில் தனியார் பேருந்தில் போதையில் இளம் ஜோடிகள் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோட்டில் தனியார் பேருந்தில் போதையில் இளம் ஜோடிகள் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரோடு பேருந்து நிலையத்தில் காதல் ஜோடி மற்றும் கள்ளக்காதல் ஜோடியினரும் தங்களது செக்ஸ் விளையாட்டில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் ஏற வருவது போல் சில ஜோடிகள் வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து அங்கும், இங்கும் நோட்ட மிட்டு செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் ஈரோடு மினி பேருந்து நிலையத்துக்கு ஒரு வாலிபருடன் ஒரு இளம்பெண் வந்தனர். இருவரும் போதையில்  இருந்ததாக கூறப்படுகிறது. பேருந்து ஏற வந்தது போல் வந்த இவர்கள் பிறகு மினி பேருந்தில் நிலையத்தில் திடீரென படுத்து கொண்டனர். அதன் பிறகு தான் அவர்கள் வரம்பு மீறி நடக்க தொடங்கினர். இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் போதை வேறு கேட்கவா வேண்டும். அந்த பெண் முதலில் இளைஞர் மீது கையை போட்டு அணைத்தார். இதனையடுத்து இருவரும் சுமார் 1 மணி நேரம் செக்ஸ் உல்லாசத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வெளியூர் போய் பேருந்தில் திரும்பிய சில பயணிகள் இதை கண்டதும் முகம் சுழித்தப்படி சென்றனர். 

இதுதொடர்பாக ஈரோடு பேருந்து நிலையத்தில் திருட்டை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், இப்படி செக்ஸ் உல்லாசத்தில் ஈடுபடுவர்களையும் போலீசார் கண்டறிந்து விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!