#BREAKING: கடவுளே இந்த மாதிரி எந்த தந்தைக்கு நடக்கக்கூடாது.. கண்முன்னே மகள் தலை நசுங்கி துடிதுடித்து பலி.!

By vinoth kumarFirst Published Dec 13, 2023, 11:44 AM IST
Highlights

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஜம்புலிங்கம் என்பவர் 3ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் ஜனுஷிகாவை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி தந்தை கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகள்  ஜனுஷிகா(8) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் இருசக்கர வாகனத்தில் மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல இன்று காலை மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது புவனகிரி பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி ஜனுஷிகா தலை நசுங்கி தந்தை கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இதில் தந்தை ஜம்புலிங்கமும் படுகாயமடைந்தார். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த  ஜம்புலிங்கத்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இதையும் படிங்க;- ஹாப்பி நியூஸ்.. வரும் 27ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

மேலும் விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகள் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!