நெய்வேலியில் புதிய அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 5 தொழிலாளர்கள் படுகாயம்..!

By vinoth kumarFirst Published Dec 22, 2022, 2:23 PM IST
Highlights

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நெய்வேலி பகுதியில் 3 சுரங்கங்களை அமைத்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

நெய்வேலியில் புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நெய்வேலி பகுதியில் 3 சுரங்கங்களை அமைத்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும்.

இதையும் படிங்க;- கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எத்தனை பேருந்துகள் தெரியுமா.?

இந்நிலையில், அண்மையில் நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் கட்டமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடல்முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்.. திடீரென ரயில் முன் பாய்ந்த பெண் வழக்கறிஞர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்..!

click me!