பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட அணைகளில் உள்ள நீர் மின் நிலையங்களும் அரசின் மெத்தன போக்கும்!!

By Dinesh TGFirst Published Oct 4, 2022, 10:26 AM IST
Highlights

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம். 
 

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கேரள - தமிழக அரசுகளுக்கிடையே நீர் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படிதான் தற்போதும் இருமாநிலங்களுக்கு இடையே நீர் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தை பிஏபி என்று சுருக்கமாக கூறுவதுண்டு. இத்திட்டத்தில் சோலையாறு, பரம்பிக்குளம், காடம்பாறை, ஆழியாறு உட்பட 10 அணைகள் உள்ளன. இவற்றில் காடம்பாறை அணை மட்டும் எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது கட்டப்பட்டது.

தலைசிறந்த பொறியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து இந்த அணைகளை உருவாக்கினர். இதில் நவமலை சர்க்கார்பதி காடம்பாறை ஆழியாறு அணைகளில் நீர் இருப்பு இருக்கும் வேளைகளில் மின் நிலையத்தின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்து வழக்கம். இதன் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.  

கோவையில் செவிலியரை குத்தி கொலை செய்த கணவன் தற்கொலைக்கு முயற்சி

இந்த நிலையில்  அணைகளில் தற்போது போதிய நீர் இருந்தும் மின் உற்பத்தி செய்வதை நீண்ட காலமாக தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துஇருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தற்போது அதிக விலை கொடுத்து மற்ற மாநிலங்களில் மின்சாரம் பெற்று வரும் நிலையில் நமது நீர் மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்தினாலே கணிசமான வருமானம் அரசுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர். 

ஒரு சில அணைகளில் இருந்து மின் உற்பத்திக்காக நீரை வெளியேற்றினாலும், அந்த நீர் மீண்டும் அணைகளுக்கே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர் நிரம்பியே காணப்படுகின்றன. இவை அனைத்தும் இருந்தும் அரசு ஏன் மெத்தன போக்காக செயல்பட்டு அதிக விலை கொடுத்து வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். 

ஓஹோ... இதுதான் கோவை குசும்பா... மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை வழிபாடு..!

அதேபோல் பிஏபி திட்டத்தில் முக்கிய பங்காற்றி வரும் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை போதிய பராமரிப்பு இல்லாததால் மதகு உடைந்து 6 டிஎம்சி தண்ணீர் கேரளாவில் உள்ள அரபிக் கடலில் வீணாக கலந்து வருகிறது. வெளியேறிய 6 டிஎம்சி தண்ணீரை கொண்டு 40 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டு விளைச்சல் எடுக்கலாம். தமிழ்நாட்டின் முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றதை தற்போதைய ஆட்சியாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக, வேண்டுகோளாக இருக்கிறது.

 

click me!