கோயம்புத்தூரில் தங்க நகை பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டிகள் கொள்ளை; வைரல் வீடியோ!!

Published : Oct 20, 2022, 12:51 PM ISTUpdated : Oct 20, 2022, 01:46 PM IST
கோயம்புத்தூரில் தங்க நகை பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டிகள் கொள்ளை; வைரல் வீடியோ!!

சுருக்கம்

கோயம்புத்தூரில் தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளையடித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

கோயம்புத்தூர் ராஜ வீதி அடுத்த சண்முகா நகர் பகுதியில் மோகன் டை என்ற பெயரில் மோகன் குமார்(45) தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க நகை கடைகள் மற்றும் மொத்த வியாபாரமாக தங்க நகைகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே (20 ) என்பவர் பணியில் சேர்ந்தார். பிரமோத் வித்தால் நேற்று காலை 8.30 மணியளவில் பட்டறைக்கு சென்றுள்ளார். பட்டறைக்கு மற்ற ஊழியர்களும், உரிமையாளரும் பணிக்கு வராத நிலையில் கடையின் சாவியை எடுத்து கடையில் இருந்த ஒரு கிலோ அளவிளான தங்க நகை மற்றும் கட்டிகளை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார். 

கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தையும் அறிந்து வைத்துள்ளார். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.  இதனையடுத்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் மோகன் குமார் அளித்த புகாரில் 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 1067.850 கிராம் தங்க நகைகள்மற்றும் தங்க கட்டிகள் திருடுபோனதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மேலும் நகையை திருடியவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகை திருடிக்கொண்டு சொந்த ஊர் சென்றுயிருப்பாரா?? நகையை வேறு யாரிடமாவது விற்பனை செய்து இருப்பாரா அல்லது முயற்சித்து வருவாரா? கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நகையை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ வலியால் துடித்த பெண்… ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை… பின்னர் நடந்தது என்ன?பிரசவ வலியால் துடித்த பெண்… ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை… பின்னர் நடந்தது என்ன?

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!