8 மனுக்களும் தள்ளுபடி... பெரும் சிக்கலில் திருமுருகன் காந்தி..!

Published : Jul 09, 2019, 03:25 PM ISTUpdated : Jul 09, 2019, 03:34 PM IST
8 மனுக்களும் தள்ளுபடி... பெரும் சிக்கலில் திருமுருகன் காந்தி..!

சுருக்கம்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும், ஒரு சமூகத்தினருக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை மக்களிடம் திணித்ததாகவும் திருமுருகன் காந்தி மீது இதுபோல காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் திருமுருகன் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால் வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், திருமுருகன் காந்தியின், மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அனைத்து வழக்குகளையும் அவர் எதிர் கொள்ளவேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

சென்னை மின்சார ரயில் மீது பாட்டில் வீச்சு! அலறிய பயணிகள்.. ரத்த வெள்ளத்தில் 3 பேர்!
4 மாதங்களாக வலியால் துடித்த 14 வயது சிறுவன்.! விடாத இரண்டு காமக்கொடூரன்கள்.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!