தலைமை அதிகாரியாக தமிழக திருநங்கை... அதிரடியாக நியமித்த ஸ்விக்கி நிறுவனம்..!

Published : Jul 12, 2019, 03:26 PM IST
தலைமை அதிகாரியாக தமிழக திருநங்கை... அதிரடியாக நியமித்த ஸ்விக்கி நிறுவனம்..!

சுருக்கம்

ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக  தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.    

ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக  தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு கொண்ட இவர் ஐரோப்பா, அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு பேஷன் டிசைனராக இருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், தனியாக ஒரு ஆன்லைன் பேஷன் இணையத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது இவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!