ஆசிரியர் மீது பாலியல் புகார்... மேலும் ஒரு பள்ளிக்கு நோட்டீஸ்... பள்ளி கல்வித்துறை அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 29, 2021, 6:43 PM IST
Highlights

தற்போது புதிதாக சென்னை செனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மீது முன்னாள் மாணவிகள் மீது அங்கு படித்த மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் அடுத்தடுத்து பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ம சேஷாத்ரி மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வணிகவியல் ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மாணவிகளின் பாலியல் புகார் ஆதாரத்துடன் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனும், மகரிஷி வித்யா  மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

இதில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டன. அதையடுத்து நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது புதிதாக சென்னை செனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மீது முன்னாள் மாணவிகள் மீது அங்கு படித்த மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “29.05.2021 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில் செனாய் நகர், புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளியின் தாளாளர்/முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பெயர் மற்றும் அன்னார் மீது பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை விவரம் மற்றும் அவ்வாசிரியர் மீது இதற்கு முன்பு மாணவிகளிடமிருந்து புகார் ஏதும் பெறப்பட்டு பள்ளி நிர்வாகத்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற விவரத்தினை இச்செயல்முறை கிடைக்கப்பெற்ற அன்றே இவ்வலுவலகம் சமர்பித்திட பள்ளியின் தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!