சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! மொத்தம் 27 மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published : Mar 12, 2025, 03:09 PM IST
சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! மொத்தம் 27 மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சுருக்கம்

Southern Railway Cancels 27 Electric Trains: பொன்னேரி - கவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 13, 15 தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. . அந்த வகையில் 5 ரூபாய் டிக்கெட்டில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய முடியும். குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையும் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மார்ச் 13, 15 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வரை முழுமையாக ரயில்கள் ரத்து 

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35, சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 8.35, 10.15, பகல் 12.10, மதியம் 1.05 மணி இந்த ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி  முழுமையாக ரயில்கள் ரத்து 

காலை 9.40,  பகல் 12.40 மணிக்கு சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

சூலுார்பேட்டை - நெல்லுார் வரை முழுமையாக ரயில்கள் ரத்து 

சூலுார்பேட்டை - நெல்லுார் மாலை 3.50, சென்ட்ரல் - ஆவடி இரவு 11.40 மணி ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல்  

கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9.55, காலை 11.25, பகல் 12.00 மணி ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது .

கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை 

காலை 10.55 செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது ‌

நெல்லுார் - சூலுார்பேட்டை 

மாலை 6:45 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சூலுார்பேட்டை -சென்னை சென்ட்ரல்

சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 11.45, மதியம் 1.00, 1.15, 2.30, மாலை 3.15, 3.10, இரவு 9. 00 மணி வரை உள்ள ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் 

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, காலை 9.55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும், கும்மிடிப்பூண்டி - தாம்பரம், மாலை 3.00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்கள்

சென்ட்ரல் - பொன்னேரிக்கு காலை 9.00, 10.30, 11.35 பகல் 12.40 எண்ணூருக்கு காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில்களும், பொன்னேரி - சென்ட்ரலுக்கு காலை 11.42, மதியம் 1.18, மாலை 3.33, எண்ணுார் - சென்ட்ரலுக்கு பகல் 12.43, மீஞ்சூர் - சென்ட்ரல் மதியம் 2.59 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ரயில்வே தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!