அடுத்த 2 நாளில் லேசான மழை… - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published : Jun 22, 2019, 04:50 PM IST
அடுத்த 2 நாளில் லேசான மழை… - வானிலை ஆய்வு மையம் தகவல்

சுருக்கம்

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தேனி,கோவை, திண்டுக்கல், நெல்லை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வெப்ப சலனத்தால், சென்னையில் அடுத்த 2 நாளுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து வருகிறது. விரைவில் மழை பெய்து, வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.

கடந்த 24 மணி நேரத்தில், வேடசந்தூரில் 7 செ.மீ., தேவாலாவில் 4 செ.மீ., பெரியாறு, நடுவட்டம் பகுதிகளில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம், களியாக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்.. என்னென்ன தெரியுமா?
சென்னை மெட்ரோ பயணிகளே உஷார்.. ரயிலில் இனி சத்தமாக பேசினால் அபராதம்.. புதிய விதி வந்தாச்சு!