Chennai News: ஷாக்கிங் நியூஸ்! திடீர் மாரடைப்பு! சென்னையில் துடிதுடித்து உயிரிழந்த பெண் காவலர்!

By vinoth kumarFirst Published Aug 2, 2024, 9:01 AM IST
Highlights

சென்னை பெரம்பூர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையதத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜெயசித்ரா(49). இவர் அயனாவரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

சென்னையில் பெண் காவலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. 

Latest Videos

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: தமிழகத்தில் இன்று எந்த பகுதியில் மின்தடை ? எத்தனை மணி நேரம் தெரியுமா?

இந்நிலையில், சென்னை பெரம்பூர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையதத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜெயசித்ரா(49). இவர் அயனாவரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.  

இதையும் படிங்க:  Ration Shop: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!

உடனே அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

click me!