சென்னையில் 500ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மதுரையில் ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published Apr 26, 2020, 7:00 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று 64 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1885ஆக அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
 

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 6500க்கும் அதிகமானோருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுவருகிறது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள்தான் உள்ளது. 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் பாதிப்பு தாறுமாறாக உள்ளது. தினமும் தமிழ்நாட்டில் கொரோனா உறுதியாகும் எண்ணிக்கையில், பாதிக்கும் மேல் சென்னையை சேர்ந்தவர்கள் தான். இன்று 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 28 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்கு மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் இன்று கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை. திருப்பூரில் 2 பேருக்கு மட்டும் பாதிப்பு உறுதியானது.  

ஆனால் இதுவரை இல்லாதளவிற்கு மதுரையில் இன்று ஒரே நாளில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிப்பு எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 58

சென்னை - 523

கோவை - 141

கடலூர் - 26

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 6

காஞ்சிபுரம் - 19

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

மதுரை - 75

நாகப்பட்டினம் - 44

நாமக்கல் - 59

நீலகிரி - 9

பெரம்பலூர் - 7

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 15

ராணிப்பேட்டை - 39

சேலம் - 31

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சாவூர் - 55

தேனி - 43

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 53

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 47

விருதுநகர் - 32.
 

click me!