நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்... ராதாகிருஷ்ணன் அதிரடி தகவல்..!

Published : Apr 05, 2021, 01:10 PM IST
நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்... ராதாகிருஷ்ணன் அதிரடி தகவல்..!

சுருக்கம்

மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், முதன்முறையாக அன்றாட கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மகாராஷ்டிரா, மும்பை, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய இடங்களில் நோய்த் தொற்றின் அளவுக்கு இல்லாவிட்டாலும்கூட, தமிழ்நாட்டிலும் அச்சம் தரும் வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

பரிசோதனை, கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பது, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை முறையாக மேற்கொண்டு வருகிறோம். 7-ம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்படும். தேர்தல் காலத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் வாக்குப் பதிவுக்குப் பிறகு இதைத் தொடங்குவோம். உள்ளாட்சி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து முழு வீச்சில் இந்தப் பணிகளைத் தொடங்க உள்ளனர்.

4.5 லட்சம் குடியிருப்புப் பகுதிகளில் 925 நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து, தன்னார்வலர்கள் மூலம் பொருட்களை விநியோகம் செய்யவும், அவர்களை முழுமையாகப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தொற்றைக் குறைக்கக் களப்பணியாளர்கள் குழுக்களும், கண்காணிப்புக் குழுக்களும் முழு வீச்சில் செயல்படும்.

தற்போது 3 ஆக உள்ள கொரோனா தொற்றை உறுதிப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் மையங்கள் 10 ஆக உயர்த்தப்படும். காய்ச்சல் முகாம்களும் முழுவீச்சில் தொடங்கப்பட உள்ளன. 54 லட்சம் கொரோனா தடுப்பூசி  நம்மிடம் இருந்தாலும்  தினமும் 15 ஆயிரம் பேர்தான் தடுப்பூசி போடுகின்றனர் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!