'சென்னை என் மனதை வென்றது!' ரோடு ஷோவில் கூடிய கூட்டத்தைப் பார்த்து உருகிய பிரதமர் மோடி

By SG BalanFirst Published Apr 9, 2024, 11:46 PM IST
Highlights

சென்னையில் காணப்படும் உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சென்னை தன் மனதை வென்றுவிட்டதாகவும் இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ரோடு ஷோவக்குப் பிறகு பிரதமர் மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இந்த ஆண்டில் ஏழாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். இரண்டு நாள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் அவர் இன்று மாலை சென்னையில் நடைபெற்ற ரோடு ஷோவில் மக்களைச் சந்தித்தார். தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை சந்திப்பு வரை 2 கி.மீ. தூரம் வாகனப் பேரணி சென்றார்.

இந்த ரோடு ஷோ பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

சென்னை என் மனதை வென்றது! இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன. சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

நானும் ஒரு விவசாயி, விவசாயி படும் கஷ்டம் எனக்கு தெரியும்: எடப்பாடி பழனிசாமி உருக்கம்

சென்னை என் மனதை வென்றது!
இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.
சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம்,… pic.twitter.com/2gdpbqj5KR

— Narendra Modi (@narendramodi)

இந்த துடிப்பான நகரத்தின் நலனுக்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று சென்னையைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக, 'வாழ்வை எளிதாக்கும்' முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், திறப்பதற்கும் நான் அடிக்கடி இங்கு வந்துள்ளேன். இதன் அடிநாதமாக இருப்பது இணைப்புகள். சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் திறக்கப்பட்டது. வரும் காலங்களில் எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

சென்னை-கோயம்புத்தூர் மற்றும் சென்னை-மைசூரு இடையேயான இணைப்பு மேம்பட உதவி புரிந்த வந்தே பாரத் விரைவு வண்டிக்கு நன்றி. சென்னையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் வலைப்பின்னல்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை போன்ற முக்கிய சாலைத் திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள மற்ற சாலைத் திட்டங்களின் விரிவாக்கம் வணிகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்.

வீட்டு வசதித் துறையில் குறிப்பிடத்தக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சில காலத்திற்கு முன்பு, இலகுவான வீடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பல வீடுகள் திறக்கப்பட்டன, இதனால் பல விருப்பங்களுக்கு சிறகுகள் கிடைத்தன. மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் மற்றும் ஐஐடி-மெட்ராஸின் டிஸ்கவரி கேம்பஸ் போன்ற திட்டங்களில் எங்கள் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது, இது வணிகத்தையும் புதுமை கண்டுபிடிப்புகளையும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

click me!