Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. இதோ லிஸ்ட் இருக்கு! நீங்களே பாருங்க.!

Published : Jan 07, 2023, 07:01 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. இதோ லிஸ்ட் இருக்கு! நீங்களே பாருங்க.!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி, போரூர்  உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

அண்ணாசாலை:

உயர் நீதிமன்றம், கடற்கரை சாலை 2வது குறுக்கு தெரு, ஏரபாலு தெரு, அர்மேனியன் தெரு, ராஜா அண்ணாசாலை மன்றம், என்எஸ்சி போஸ் சாலை, மண்ணடி, முத்தியால்பேட்டை, கொத்தவால் சாவத் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்

வியாசர்பாடி:

சி.எம்.பி.டி.டி., வி.எஸ்.மணி நகர், ஆண்டாள் நகர், எம்.ஆர்.எச். ரோடு, சின்ன தோப்பு, கந்தசாமி நகர், விநாயகபுரம்.

போரூர்:

கோவூர், பெரியபனிச்சேரி, தண்டலம், பாபு கார்டன், மேத்தா நகர், குன்றத்தூர் மற்றும்  சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!