சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

By vinoth kumarFirst Published Jan 6, 2023, 10:49 AM IST
Highlights

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபச்சாரம் தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. உள்ளே திறந்து பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் 4 இளம்பெண்கள்.!

இந்நிலையில், சென்னை அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அடிக்கடி வாலிபர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை போலீசார் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அடிக்கடி வாலிபர்கள் வந்து சென்றது தெரியவந்தது.

பின்னர், விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  திருவேற்காடு கனக துர்கா நகரை சேர்ந்த பாலியல் புரோக்கர் சங்கீதா (28)  2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 இளம்பெண்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்து வந்த விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு

click me!