Power Shutdown in Chennai:அட கடவுளே.. சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. வெளியான லிஸ்ட்.!

By vinoth kumarFirst Published Dec 8, 2022, 8:05 AM IST
Highlights

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ஆவடி உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- நாங்களும் சளைச்சவங்க இல்ல!தனியார் ஹாஸ்பிட்டலுக்கு இணையான மருத்துவம்!கண்ணிலிருந்த மரத்துண்டு வெற்றிகரமாகஅகற்றம்

தாம்பரம்:

கடப்பேரி ஆர்.பி.ரோடு ஒரு பகுதி, வேல்முருகன் தெரு, வினோபோஜி நகர், மாணிக்கம் நகர், பி.பி.ஆர்.தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

IT காரிடார்:

சிறுசேரி நாவலூர் சிப்காட், புதுப்பாக்கம், ஈகத்தூர், ஓஎம்ஆர், சிப்காட் சிறுசேரி முழுப் பகுதி மற்றும் 
 சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஆவடி:

அலமாதி கோவிந்தபுரம், வெண்மணி நகர், பால்பண்ணை சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  திருவண்ணாமலை தீபத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது பயங்கரம்.. சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி..!

click me!