சென்னையில் அதிர்ச்சி சம்பவம்... கொரோனாவின் கோரப்பசியால் இளம்பெண் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published May 22, 2020, 5:21 PM IST
Highlights

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று பரிதாமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று பரிதாமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 6,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ராயபுரத்தில் 153 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவரின் உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதி தெருக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், ராயபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது இளம்பெண் சனி , காய்யச்சல் காரணமாக கடந்த 17ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பாதுகாப்புடன் உறவினர்கள் முன்னிலையில் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி ராயபுரம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. 

click me!