சென்னையில் பயங்கரம்! 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

By vinoth kumarFirst Published Aug 2, 2024, 12:07 PM IST
Highlights

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே, நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அடையாறு ஆற்றின் கரையோரம் வெட்டுக்காயங்களுடன் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சென்னையில் 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டு உடல் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே, நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அடையாறு ஆற்றின் கரையோரம் வெட்டுக்காயங்களுடன் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Latest Videos

இதையும் படிங்க: பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) வெள்ளை சஞ்சய் (17) என்பதும் இவன் மீது பல்வேறு வழக்குகள் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

click me!