உலக கோப்பையில் ஆடும் இந்திய அணி!! அவங்க 2 பேருல ஒருத்தர் போதும்.. ஜாகீர் கானின் அதிரடி தேர்வு

By karthikeyan VFirst Published Feb 1, 2019, 11:48 AM IST
Highlights

கடைசியாக ஆடியுள்ள 5 ஒருநாள் தொடர்களில் இந்திய அணி 4ல் வென்றுள்ளது. இந்த 5 தொடர்களில், 4 வெளிநாட்டு தொடர்கள். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. கடைசியாக ஆடியுள்ள 5 ஒருநாள் தொடர்களில் 4ல் வென்றுள்ளது. இந்த 5 தொடர்களில், 4 வெளிநாட்டு தொடர்கள். இங்கிலாந்தில் மட்டும்தான் ஒருநாள் தொடரை 2-1 என இழந்தது. தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது இந்திய அணி. தொடர் வெற்றிகள் இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்திய அணி எந்த அணிக்கு எதிராகவும் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஆரோக்கியமான விஷயம். இந்திய அணியின் ஆதிக்கம், ஒரு அணியாக அவர்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது. 

உலக கோப்பைக்கு முன் இந்திய அணி நல்ல ஃபார்மில் வலுவாக இருப்பது நல்ல விஷயம். பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. மேலும் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகீர் கான், உலக கோப்பைக்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல வேண்டும். ஹர்திக் பாண்டியாவை நான்காவது வேகப்பந்து வீச்சாளராக உறுதியாக கருதினால் கேஎல் ராகுலை அணியில் எடுத்துக்கொள்ளலாம். ரிஷப் பண்ட் அணியில் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள ஜாகீர் கான், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் போதும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 

ஜாகீர் கான் தேர்வு செய்துள்ள அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), தோனி, ராயுடு/தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா, சாஹல், கேஎல் ராகுல்/மற்றொரு வேகப்பந்துவீச்சாளர். 
 

click me!