
உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணியை 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்கடித்து வெற்றிக் கண்டதால் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதியதில் 19 மற்றும் 20-ஆவது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பில் மலேசியா இரு கோல்களை அடித்தது.
இதையடுத்து சரிவிலிருந்து மீள மிகவும் போராடிய இந்திய அணி 24 மற்றும் 26-ஆவது நிமிடங்கள் கோலடித்தது. இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது.
இதையடுத்து ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல, 48-ஆவது நிமிடத்தில் மலேசியாவுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் ரஹிம் கோலடிக்க, அதுவே வெற்றிக்கோலாக அமைந்தது.
கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து 2-ஆவது முறையாக மலேசியாவிடம் தோற்றுள்ளது இந்தியா.
அதேநேரத்தில் இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய மலேசியா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது.
மலேசியா தனது அரையிறுதியில் அர்ஜென்டீனாவை சந்திக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.