
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறியுள்ளார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ரஷியாவின் செர்ஜி சிரான்டுடன் மோதினார்.
இதில், 21-13, 21-12 என்ற நேர் செட்களில் செர்ஜி சிரான்டை தோற்கடித்தார் ஸ்ரீகாந்த்.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அசத்தலாக ஆடிய ஸ்ரீகாந்த், 30 நிமிடங்களுக்குள்ளேயே ஆட்டத்தை முடித்து வைத்துவிட்டார்.
ஸ்ரீகாந்த், தனது 2-வது சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் கோர்வீயுடன் மோதுகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.