
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் முதலிடத்தில் இருந்த வாவ்ரிங்கா படுதோல்வி அடைந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் போட்டியில் நேற்று நடைபெற்ற 4-ஆவது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் இளம் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோல்வி கண்டார்.
ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் அலெக்சாண்டர், அடுத்தச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.
போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது 4-ஆவது சுற்றில் 7-6 (5), 7-6 (4) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகட்டை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ஃபெடரர் அடுத்த சுற்றில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார்.
போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் நிகோலஸ் மஹத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நடால் அடுத்ததாக அமெரிக்காவின் ஜேக் சாக்கை சந்திக்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.