
லண்டனில் பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இரண்டாவது சுற்றில் யாரும் எதிர்பார்த்திராத அளவில் தோல்வி அடைந்தார்.
ஜோஷ்னா தனது முதல் சுற்றில் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ரேச்சல் கிரின்ஹம்மை எதிர்கொண்டு, 11-6, 8-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
தனது இரண்டாவது சுற்றில் ஜோஸ்னா, எகிப்து நாட்டைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ரனீம் எல் வெலிலியை எதிர்கொண்டார். இதில், 8-11, 7-11, 7-11 என்ற செட் கணக்கில் ஜோஷ்னா தோல்வி அடைந்தார்.
தற்போது ஜோஷ்னா போட்டியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.