கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக்..! அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஏந்திய மேரி கோம், மன்ப்ரீத் சிங்

By karthikeyan VFirst Published Jul 23, 2021, 6:46 PM IST
Highlights

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் தொடக்க விழா நடத்தப்படுகிறது.  
 

இந்தியா உட்பட 205 நாடுகளை சேர்ந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு ஆடுகின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக் அணிவகுப்பில், ஜப்பானிய எழுத்துவரிசைப்படி, 21வது நாடாக இந்தியா சென்றது. இந்தியா சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றனர்.

ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
 

click me!