
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி ரஷியாவில் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் தொடக்க ஆட்டத்தில் ரஷியாவும் - சௌதி அரேபியாவும் மோதுகின்றன. பல்வேறு நாடுகளில் பயிற்சியில் கால்பந்து வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பாரிஸில் திங்கள்கிழமை பிரான்ஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடந்த நட்பு ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸ் ஓலிவர் கிரெளட், நேபிள் ஃபேகிர் ஆகியோர் தங்கள் அணிக்கான கோல்களை அடித்தனர்.
இதுகுறித்து அயர்லாந்து அணியின் பயிற்சியாளர் மார்ட்டின் ஓ நீல், "பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பிரான்ஸ் அணி சிறப்பாக வலுவடைந்துள்ளது" என்று கூறினார்.
அதேபோன்று, செயின்ட் கேலனில் நடைபெற்ற இத்தாலி - சௌதி அரேபியா அணிகளுக்கான நட்பு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் - துனிசியா இடையே பிராகாவில் நடந்த நட்பு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
அதேபோன்று, மெக்ஸிகோ - வேல்ஸ் அணிகள் இடையே கலிபோர்னியா ரோஸ்பெளலில் நடந்த நட்பு ஆட்டம் கோலின்றி சமனில் முடிவடைந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.