தமிழ் மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் அளவே இல்லை – சச்சின் நெகிழ்ச்சி…

 
Published : Sep 30, 2017, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
தமிழ் மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் அளவே இல்லை – சச்சின் நெகிழ்ச்சி…

சுருக்கம்

There is no limit to the love and support of Tamil people - Sachin

தமிழ் மக்களின் பாசத்திற்கும், அன்புக்கும் அளவே இல்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புரோ கபடி லீக் சீசன் - 5ன் சென்னை சுற்றுப் போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றுத் துவங்கியது.

இந்தப் போட்டியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் தலைவாஸ் இணை உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.

முன்னதாக இந்தப் போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர், “சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸின் முதல் போட்டியை காண வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

எப்போது கிரிக்கெட் விளையாட சென்னை வந்தாலும் தமிழ் மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் அளவே இல்லை.

தற்போது கபடியை பார்க்க வந்துள்ளேன். தமிழர்களுக்கு கபடி மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?