பத்தாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டை நாங்கள் மறக்கக்கூடிய ஒன்று – கண்கலங்கும் கோலி

 
Published : May 16, 2017, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
பத்தாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டை நாங்கள் மறக்கக்கூடிய ஒன்று – கண்கலங்கும் கோலி

சுருக்கம்

The tenth season is something we can forget about IPL cricket -

பத்தாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் படு மோசமான தோல்வியை சந்தித்ததால் இதனை மறக்கக்கூடிய ஒன்று என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வெரும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியைத் தோற்கடித்தது பெங்களூர் அணி. எனினும் பெங்களூர் அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது.

ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியது:

“இந்த சீசன், நாங்கள் மறக்கக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. நாங்கள் செய்த தவறுகள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

டெல்லிக்கு எதிராக கிடைத்த வாய்ப்பை எங்கள் வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அடுத்த சீசனில் வாய்ப்பிருந்தால், இப்போதுள்ள வீரர்களில் 3 முதல் 5 பேரை தக்கவைத்துக் கொள்வோம். இந்த சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியோடு முடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டார் கோலி.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!