காலிறுதிக்கு முன்னேறியது பஞ்சாப் வங்கி அணி…

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
காலிறுதிக்கு முன்னேறியது பஞ்சாப் வங்கி அணி…

சுருக்கம்

51-ஆவது அகில இந்திய பாம்பே தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பஞ்சாப் தேசிய வங்கி அணி காலிறுதிக்கு முன்னேறியது.

மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் தேசிய வங்கி அணி 4-3 என்ற கோல் கணக்கில் சிஏஜி (தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம்) அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் தேசிய வங்கி அணி 6 புள்ளிகளுடன் "சி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு காலிறுதியையும் உறுதி செய்தது.

சிஏஜி அணி, பஞ்சாபிடம் தோற்றபோதும் கோல் வித்தியாச அடிப்படையில் "சி' பிரிவில் இருந்து 2-ஆவது அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

"டி' பிரிவு ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 5-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் கடற்படை அணி காலிறுதியை உறுதி செய்தது.

இந்தப் பிரிவில் 2-ஆவது இடம்பிடித்ததன் மூலம் மேற்கு ரயில்வே அணியும் காலிறுதிக்கு முன்னேறியது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்