
சிலிகுரி,
தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது.
தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சிலிகுரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தரப்பில் கமலாதேவி 45-வது நிமிடத்திலும், இந்துமதி 58-வது நிமிடத்திலும், சஸ்மிதா மாலிக் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
நேபாள அணி சார்பில் சபித்ரா பண்டாரி பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.