
இத்தாலி கால்பந்து சாம்பியன் பட்டத்தை 13-வது முறையாக வென்றது ஜுவென்டஸ் அணி.
இத்தாலி நாட்டில் உள்ள பிரபல கால்பந்து கிளப் அணிகள் இடையே கோப்பா இத்தாலியா நாக் ஔட் லீக் போட்டிகள் நடைபெறுகிறது.
முதல் போட்டி கடந்த 1922-ல் தொடங்கி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. எட்டு சுற்றுக்கள் நடத்தப்பட்டு 16 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இரண்டு முறை அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெல்லும் அணி இறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு சுற்று லீக் போட்டிகள் முடிந்து இறுதிச் சுற்றுக்கு ஜுவென்டஸ் அணியும், ஏசி மிலன் அணியும் தகுதி பெற்றன.
ரோம் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜுவென்டஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஏ சி மிலன் அணியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது ஆண்டாக கோப்பா இத்தாலியா பட்டத்தை வென்றது. இது அந்த அணி பெறும் 13-வது பட்டமாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.