மாநில அளவிலான சதுரங்கப் போட்டி முடிவுகள்…

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
மாநில அளவிலான சதுரங்கப் போட்டி முடிவுகள்…

சுருக்கம்

விருதுநகர் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில் சிவகாசியில் மாநில அளவிலான ஓப்பன் சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 280 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியை மாவட்ட சதுரங்கக் கழகச் செயலர் எஸ்.ஆர்.ராஜன் தொடக்கி வைத்தார்.

போட்டியில் திருச்சி குணால் முதல் பரிசும், மதுரை கணேஷ்பாபு இரண்டாமிடமும், மதுரை நந்தகுமார் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

போட்டியில் கலந்து கொண்ட 8,10,12,14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பள்ளி முதல்வர் சித்ராஜெயந்தி பரிசு வழங்கினார்.
மாவட்ட சதுரங்க கழகப் பொருளாளர் வி.சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்றவர்கள்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்