
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், “விளையாட்டுப் போட்டுகளில் பங்குபெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதிய தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .
அதன்படி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வீதியம் ரூ. 10 ஆயிரத்தில்லிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 8000 லிருந்து 16 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.