
செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.
செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியின் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் எடுத்தது.
ஷ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் வீரர் மார்கண்டே 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பஞ்சாப் 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
அதிகபட்சமாக குர்கீரத் சிங் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
மும்பை வீரர் சிவம் துபே 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
மற்றொரு பிரிவான 'பி' பிரிவில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த பரோடா 8 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
மற்ற ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜார்க்கண்டையும், உத்தரப் பிரதேசம் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கு வங்கத்தையும் வீழ்த்தி அசத்தின.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.