மார்ச்-ல் மீண்டும் பந்துவீச களமிறங்குகிறார் சாமுவேல்ஸ்…

 
Published : Feb 17, 2017, 11:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
மார்ச்-ல் மீண்டும் பந்துவீச களமிறங்குகிறார் சாமுவேல்ஸ்…

சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச ஐசிசி அனுமதி அளித்ததை தொடந்து மார்ச்-ல் பந்துவீச உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சாமுவேல்ஸ் பந்துவீசும் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பந்துவீச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சாமுவேல்ஸ், கடைசியாக நவம்பர் 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். பிறகு ஜிம்பாப்வே-வில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் அவர் நீக்கப்பட்டார்.

மார்ச்-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதில் சாமுவேல்ஸ் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?