இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறினார்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் சாய்னா நெவால் 21-14, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் சமீர் வர்மா 21-17, 21-15 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹன் யூவை தோற்கடித்தார்.
மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் 7-21, 12-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸனிடம் தோல்வி அடைந்தார்.
மேலும், இந்தியாவின் செளரவ் வர்மா, சாய் பிரணீத் ஆகியோரும் தங்களின் 2-வது சுற்றில் தோல்வியடைந்தனர்.