
முழங்கால் காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்த சாய்னா நெவால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சீன ஓபன் பாட்மிண்டன் போட்டில் மீண்டும் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் கூறியதாவது: “அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த சாய்னா, கடந்த வாரம் முதல் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறும் சீன ஓபன் போட்டியில் அவர் பங்கேற்கிறார்.
இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்னா, சீன ஓபன் போட்டியில் பங்கேற்பதால் நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் அந்தக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது” என்று ஹர்வீர் சிங் கூறினார்.
உலக பாட்மிண்டன் சம்மேளன தரவரிசையில் தற்போது 5-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா, கடந்த ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். எனினும், 2014-ஆம் ஆண்டில் அவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள குழு உறுப்பினராக சாய்னா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, உலக பாட்மிண்டன் சம்மேளனத் தலைவர் பால் எரிக் ஹோயர் மற்றும் செயலர் தாமஸ் லுன்ட் ஆகியோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.