
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கேல் ரத்னா, அர்ஜூனா ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நாட்டின் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜூனா விருதும் வாழ்நாள் சாதனையாளருக்கான துரோணாச்சாரியார் விருது 8 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அர்ஜூனா விருது வென்ற விளையாட்டு வீரர்கள்:
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.