வேறு விளையாட்டில் கால் பதிக்கும் அதிரடி வீரர் ரோஹித் சர்மா..? ரசிகர்கள் அதிர்ச்சி

 
Published : Jun 03, 2018, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
வேறு விளையாட்டில் கால் பதிக்கும் அதிரடி வீரர் ரோஹித் சர்மா..? ரசிகர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

rohit sharma take new incarnation as a base ball player

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்திய அணியின் நிரந்தர இடம் பிடித்துள்ளார். சிறந்த அதிரடி வீரரான ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இவர் அடித்த 264 ரன்கள் தான் ஒருநாள் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

கேப்டன் கோலி ஆடாத போட்டிகளில் ரோஹித் சர்மா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்படுகிறார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

அதிரடி கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா, பேஸ்பால் வீரராக அவதாரம் எடுக்க உள்ளார். இன்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடக்கும் சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொள்ளும் அவர் பந்தை முதலாவதாக (ஃபர்ஸ்ட் பிட்ச்) வீசி போட்டியை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த கவுரவத்தை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற இருக்கிறார்.   
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!