முதல் இன்னிங்ஸில் தூக்கி அடித்தது மும்பை; 406 ஓட்டங்கள் குவிப்பு…

Asianet News Tamil  
Published : Jan 04, 2017, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
முதல் இன்னிங்ஸில் தூக்கி அடித்தது மும்பை; 406 ஓட்டங்கள் குவிப்பு…

சுருக்கம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் தமிழகத்தை எதிர்கொண்டுள்ள மும்பை, முதல் இன்னிங்ஸில் 150.3 ஓவர்களில் 406 ஓட்டங்கள் குவித்தது.

இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் தமிழக அணியை விட மும்பை 101 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது மும்பை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழகம், 115.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை, 2-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3-ஆம் நாள் ஆட்டத்தை அந்த அணியின் ஆதித்யா தாரே 19, ஸ்ரேயாஸ் ஐயர் 24 ஓட்டங்களுடன் தொடர்ந்தனர். இதில் அரைசதம் கடந்த ஆதித்யா 83 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் 36 ஓட்டங்களில் வீழ்ந்தார்.

தொடர்ந்து வந்த அபிஷேக் 58, பல்வீந்தர் சாந்து 32, ஷர்துல் தாக்குர் 52, அகஷய் கிரப் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 150.3 ஓவர்களில் 406 ஓட்டங்களை எட்டிய நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மும்பை.

தமிழக தரப்பில் விஜய் சங்கர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Urvil Patel: லக்னோவை கதற விட்ட உர்வில் படேல்.. துண்டுச்சீட்டில் எழுதி இருந்த உருக்கமான செய்தி!
IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!