
உச்சநீமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாக குழு உறுப்பினராக இருந்த ராமச்சந்திர குஹா, இந்திய கிரிக்கெட்டிலும் கிரிக்கெட் வாரியத்திலும் கேப்டன் கோலியின் ஆதிக்கம் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் எதிர்காலப் பயணத்திட்டம், தேசிய கிரிக்கெட் அகாடமி மேலாண்மை ஆகியவற்றில் கூட கோலியின் அதிகார எல்லை நீண்டுள்ளது. இவையெல்லாம் கேப்டனின் வரம்புக்குள் இருப்பதல்ல.
தற்போதைய அணி தேர்வாளர்கள் முந்தைய தேர்வாளர்கள் போல் கிரிக்கெட் ஆட்டத்தில் சாதித்தவர்கள் அல்லர். ரவி சாஸ்திரி நிறைய ஆடியுள்ளார். ஆனால் அவர் உண்மையான கிரேட் கிடையாது. அதனால் ரவி சாஸ்திரி கேப்டனுக்கு அடிபணிவது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்றைய இந்திய கிரிக்கெட்டில் தேர்வுக்குழுவினர், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அனைவரும் கோலியின் முன் குள்ளர்களாக காட்சியளிக்கின்றனர். இந்த நிலை கண்டிப்பாக மாறவேண்டும்.
அணி தேர்வாளர்கள், ஏற்கனவே சாதித்த கிரிக்கெட் வீரர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பெரிய கிரிக்கெட் வீரர்களாக இல்லாவிடினும் கேப்டனின் அதிகாரத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் அதிகாரமும், ஆசையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியாளரும் தேவைப்படும் போது கேப்டனின் அதிகார வரம்பை நிர்ணயிப்பவராக இருக்க வேண்டும். உதாரணமாக அனில் கும்ப்ளே தர்மசாலாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை தேர்வு செய்தார். அது இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற சவாலான இடங்களில் இந்திய அணி போட்டிகளையும் தொடர்களையும் வென்றால்தான் உண்மையில் இந்த அணி கிரேட் அணியாக இருக்க முடியும். கேப்டனின் அகந்தையும் அதிகாரமும் அவரது சொந்த வெற்றிக்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம். ஆனால் அது அணியின் வெற்றியாக மாற வேண்டுமானால் அந்த அதிகாரம், அகந்தை கொஞ்சம் தட்டி வைக்கப்படுவது அவசியம் என ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.